ஓசூர் பேருந்து நிலையத்தில் பெண்ணின் கைப்பையை பறித்த இளைஞருக்கு பயணிகள் தர்மஅடி

ஓசூர், ஜூன் 21: ஓசூர் தேர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவரஞ்சனி (26). இவர் கைக்குழந்தையுடன், ராயக்கோட்டை செல்வதற்காக, ஓசூர் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அங்கு பஸ் ஏறியபோது அவரின் பின்னால் வந்த ஆசாமி, திடீரென கைப்பையை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார்.

 அதிர்ச்சியடைந்த சிவரஞ்சி திருடன், திருடன் என கூச்சலிட, அங்கிருந்த பயணிகள் சிலர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் ஓசூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பேக்கை திருடியவர் அத்திப்பள்ளி அருகே எடவனளள்ளியை சேர்ந்த மதுரா (22) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 4 செல்போன், 5 சிம்கார்டுகள், 3 மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் மதுராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: