ஓசூர், ஜூன் 20: ஓசூர் அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற பெங்களூரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள ஹட்கோ பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர் (30). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் மர்ம ஆசாமிகள் சிலர், வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த பிரபாகர் கூச்சலிட்டார். அந்த நேரம் 2 பேர், வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம் விசாரித்தார். மேலும், கண்காணிப்பு பணியும் முடுக்கி விடப்பட்டது.