அரியலூர், ஜூன் 13: அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பணியாளர்களின் பணி வரலாறு முழுமையாக கணினி மயமாக்கப்படும் என்று கருவூல கணக்குத்துறை முதன்மை செயலர் தென்காசி ஜவஹர் கூறினார்.அரியலூர் மாவட்டம், விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதற்கு தலைமை தாங்கி கருவூல கணக்குத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையர் தென்காசி ஜவஹர் பேசும்போது கூறியதாவது:மாநில அரசின் நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மை ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூல பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பள பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தினை செயல்படுத்தக்கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகளும், மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்சமயம் முடிவடைந்துள்ளன. அத்துடன், இதனை முறைப்படுத்துவதன் மூலம் மாநிலம் முழுவதிலும் இருந்து நேரடி இணையத்தின் மூலம் சம்பள பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். இதில் அரசின் வரவு குறித்து உடனுக்குடன் அறிந்து ெகாள்ளலாம்.