காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வருகை தந்த ஒன்றிய நிதி அமைச்சரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயிலுக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வருகை தந்தார். அவருக்கு, மேளதாளம் முழங்க ஒன்றிய பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் கிராம மக்கள் வரவேற்றனர். கோயில் நிர்வாகம் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது, ஒன்றிய நிதி அமைச்சர், பெண்களிடம் தங்கள் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் முறையாக கிடைக்கிறதா, கிராமத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் பெறுகிறீர்களா என கேட்டறிந்தார்.