காரைக்கால்: காரைக்காலில் உதவி பதிவாளர் அலுவலகம், வீடுகளில் விடிய விடிய 12 மணி நேரம் நடந்த சோதனையில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள ஆவணங்கள், நகைகள் சிக்கின. இதையடுத்து உதவி பதிவாளர், உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புதுவை மாநிலம் காரைக்கால் நேரு வீதியில் சார் உதவி பதிவாளர் அலுவலகத்தில் திருப்பட்டினம் நிரவி பகுதியை சேர்ந்த ஒருவர், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனையை பதிவு செய்ய சென்ற போது அவரிடம் உதவி பதிவாளர் சந்திரமோகன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் உதவிப்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், உதவிப்பதிவாளர் சந்திரமோகன், அலுவலக ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.