திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் நேற்று முதல் 10 சதவீத சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டோல்கேட் கட்டண உயர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் நேற்று கப்பலூர் டோல்கேட் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் சாத்தையா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ,சுங்கக்கட்டண உயர்வினை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.