புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் வருவாய்த்துறை, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. நார்த்தாமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. இளைஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என வருவாய்த்துறை, போலீசார் உறுதி அளித்தனர். போலீசாரின் உறுதியை அடுத்து தர்ணா போராட்டத்தை மக்கள் கைவிட்ட நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது.

Related Stories: