வித்யாசாகர் கல்விக்குழுமத்தின் நிறுவனர் தின கொண்டாட்டம்

செங்கல்பட்டு: வித்யாசாகர் கல்விக்குழுமத்தின் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு,  கல்லூரி  வளாகத்தில் நிறுவனர் தினம் விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  இதில்,  வித்யாசாகர் கல்வி குழுமத்தின் ஆலோசகர் சுகல்சந்த்ஜெயின், தலைவர்  சினேகலதாசுரானா, தாளாளர் விகாஸ்சுரானா, பொருளாளர் சுரேஷ்கன்காரியா, கல்வி  நிறுவனங்களின் முதல்வர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

வித்யாசாகர் கல்விக்குழுமத்தின் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு,  கல்லூரி  வளாகத்தில் நிறுவனர் தினம் விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  இதில்,வித்யாசாகர் கல்விக்குழுமத்தின்  தலைவர் மறைந்த ஹஸ்திமல்சுரானா  நம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் சமமாக கருதும் எண்ணம் உடையவர்.அவரது மகனும், கல்விகுழுமத்தின் தாளாளருமான விகாஸ் சுரானாவும் அத்தகைய கொள்கையை பின்பற்றி வருகின்றார்.

பின்னர் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிக்கொண்டிருக்கும்  பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் 100 பேருக்கும், இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அச்சு ஊடகத்துறையில் பணியாற்றுகின்ற பொது விநியோகஸ்தரர்களுக்கும் வித்யாசாகர் கல்வி குழுமத்தின் சார்பாக நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பல்கலைக்கழகத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்து கல்வியில் சாதனை படைத்த 100 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை கல்லூரி நிர்வாகத்தினர் வழங்கி கௌரவித்தனர்.

Related Stories: