சென்னையையடுத்த ஆவடி அருகே ஜிம் மாஸ்டரும், ஆணழகனுமான ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு

சென்னை: சென்னை ஆவடி அருகே ஜிம் மாஸ்டரும், ஆணழகனுமான ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது 2 கிட்னிகளும் செயலிழந்தது தெரியவந்துள்ளது.

நெமிலிச்சேரியை சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் சபரிமுத்து என்கிற ஆகாஷ். இவர் நடுக்குத்தகை

தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பணியாற்றி வந்தார். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இவர், மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும் என கடுமையாக பயிற்சி செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி திடீரென ரத்த வாந்தி எடுத்த அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது 2 கிட்னிகளும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார்.

கடுமையாக உடற்பயிற்சி செய்தததுடன் அவர் கட்டுடல் கொண்டுவர ஸ்டீராய்டு ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் 2 கிட்னிகளும் செயலிழந்து சபரிமுத்து உயிரிழந்ததாக தெரிகிறது.

Related Stories: