வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை கொள்ளை

ஆவடி: ஆவடி அடுத்து பொத்தூர் செல்வகணபதி நகர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன்(66). இவர் இந்தியன் காஸ் நிறுவனத்தில் உதவி அலுவலராக  பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியினரின் மகன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மற்றொரு மகள் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தம்பதியர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு, சென்னையில் உள்ள தபால் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

மீண்டும் மாலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 சவரன் தங்க செயின், மோதிரம், கம்மல் மற்றும் தங்க நாணயங்கள் உட்பட ஆறு சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. இது குறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசாரிடம் புகார் கொடுத்தனர். , சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: