புதுடெல்லி: இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னைகள் தொடரும் நிலையில், இரு நாட்டின் அதிகாரிகள் மத்தியில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எல்லையில் இரு நாட்டு படைகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் சீனா தரப்பில், எல்லையில் தனது ராணுவத்தையும், ஆபத்தான ஆயுதங்களையும் குவித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராணுவ தளபதி மனோஜ் பாண்டே அளித்த பேட்டியில், ‘சீனாவிடமிருந்து பல வகைகளில் ஆபத்துகள் வருகின்றன.