டெல்லி: நிலக்கரி சுரங்கங்களை குறைப்பதற்கான எந்த ஒப்பந்தத்திலும் ஒன்றிய அரசு கையெழுத்திடவில்லை என ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். திமுக எம்.பி. கதிர் ஆனந்த் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். 2015 மார்ச் 22 முதல் 2023 ஜன.1 வரை மறு ஏலம் விடப்பட்ட 109 சுரங்கங்கள் மூலம் ரூ.4,200 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.