புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் குஜராத், ஒன்றிய அரசுகளிடம் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர் 7 பேர் வெட்டிக்கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்ற 11 பேர் தண்டனைக்காலம் முடியும் முன்பு விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.