பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்து, அந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை பிரித்து ஒக்கலிகா சமூகத்திற்கு 2 சதவீதம், லிங்காயத் வகுப்பினர்களுக்கு 2 சதவீதம் என வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். இதனிடையே கர்நாடக மாநிலத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பழங்குடியின பிரிவில் இருக்கும் முக்கிய வாக்கு வங்கியாக கருதப்படும் பஞ்சாரா, கொர்ச்சா, லம்பானி உள்ளிட்ட 6 அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி வந்தனர்.