ஆவடி: காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று திருநின்றவூரில் மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமையில் அறவழி போராட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் கே.ஜெயக்குமார் எம்.பி உள்பட ஆயிரக்கணக்கான காங்கிரசார் பெருந்திரளாக பங்கேற்றனர். இப்போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி கே.ஜெயக்குமார் பேசுகையில், தற்போது இந்தியாவில் ஒன்றிய பாஜ அரசு கொடுமையான ஆட்சி நடத்தி வருகிறது.