தனக்கு தானே தீ வைத்து கொண்டு பாஜ நிர்வாகிகள் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடியவர் கைது

மேட்டுப்பாளையம்: தனக்குத்தானே சட்டையில் தீவைத்துக்கொண்டு பாஜ நிர்வாகிகள் மீது புகார் கொடுத்த அக்கட்சியை சேர்ந்த பேக்கரி சூபர்வைசர் கைது செய்யப்பட்டார்.  மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (32). இவர் அன்னூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் சூபர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பாஜவில் இணைந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று தன் மீது பாஜ நிர்வாகிகள் பெட்ரோல் குண்டு வீசியதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மேட்டுப்பாளையம் பாஜ நகர தலைவர் உமாசங்கர் மற்றும் பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சட்டையில் தனக்குத்தானே தீ வைத்துகொண்டு நாடகமாடி, பொய் புகார் கொடுத்தது  அம்பலமானது.  இதனையடுத்து பொய்ப்புகார் கொடுத்த விஸ்வநாதன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த மேட்டுப்பாளையம் போலீசார் அவரை கைது செய்தனர்.  பின்னர்,அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: