மேட்டுப்பாளையம்: தனக்குத்தானே சட்டையில் தீவைத்துக்கொண்டு பாஜ நிர்வாகிகள் மீது புகார் கொடுத்த அக்கட்சியை சேர்ந்த பேக்கரி சூபர்வைசர் கைது செய்யப்பட்டார். மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (32). இவர் அன்னூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் சூபர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பாஜவில் இணைந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று தன் மீது பாஜ நிர்வாகிகள் பெட்ரோல் குண்டு வீசியதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.