ஊட்டி: ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ள நிலையில், நேற்று வெகு நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டனர். கோடை காலம் துவங்கிய நிலையில், சமவெளிப் பகுதிகளில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், பெரும்பாலான மக்கள் ஊட்டி, கொடைகானல் போன்ற குளிர் நிறைந்த மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்ல துவங்கியுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், வார விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் முகாமிட்டிருந்தனர்.