வேளச்சேரி தனியார் விடுதியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர் கைது

வேளச்சேரி: வேளச்சேரி, விஜிபி செல்வா நகரில் தனியார் பெண்கள் விடுதி உள்ளது. இங்கு கல்லூரி மாணவிகள் உள்பட வேலைக்கு செல்லும் 50க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்கியுள்ளனர்.  இந்நிலையில், கடந்த 14ம் தேதி வேளச்சேரி போலீசில், விடுதி நிர்வாகி புகார் அளித்தார். அதில், சில நாட்களுக்கு முன் விடுதிக்குள் நுழைந்து,  திருட முயன்ற ஒருநபர் பெண்கள் பாத்ரூமில் குளிப்பதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து வேளச்சேரி உதவி கமிஷனர் தமிழ்செல்வன் தலைமையில் தனிப்படையினர், அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மர்ம நபர் குறித்து விசாரித்தனர். அதில், அந்த நபர் பெசன்ட் நகரை சேர்ந்த பழைய குற்றவாளி துரைராஜ் (27) என தெரியவந்தது. நேற்று முன்தினம் அவரை பெசன்ட்நகரில் கைது செய்து,  வேளச்சேரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், அவர் மீது 9 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், கடந்த 3 மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்திருப்பதும், திருடுவதற்காக அதிகாலையில் வேளச்சேரி தனியார் பெண்கள் விடுதியை நோட்டமிட்டபோது, அங்கு பாத்ரூமில் பெண்கள் குளிப்பதை பார்த்து, தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து ரசித்து வந்ததும் தெரியவந்தது.இதை தொடர்ந்து துரைராஜின் செல்போனை பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதில், ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோ இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: