பொள்ளாச்சி: கணவரை தாக்கி விட்டு நாடகமாடிய சீரியல் துணை நடிகை நண்பருடன் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (42), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரம்யா (36) . இரு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதால் கூறப்படுகிறது 2 ஆண்டுக்கு முன்பு, பெற்றோர் வீட்டுக்கு ரம்யா குழந்தைகளுடன் சென்றார். சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில், சின்னத்திரையில் வாய்ப்பு கேட்டு ரம்யா சென்னை சென்றுள்ளார். சின்னத்திரை நாடகங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். அப்போது துணை நடிகராக இருந்த கோவையை சேர்ந்த டேனியல் சந்திரசேகருடன் ரம்யாவுக்கு நட்பு ஏற்பட்டது.