நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம்

மக்களவையில் இருந்து ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டங்களில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல, காங்கிரஸ் ஆளும் இமாச்சலில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகா உட்பட அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சட்டப்பேரவை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தொண்டர்கள், இன்று ரயில் மற்றும் சாலை மறியலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். குஜராத்தில் 19 மாவட்ட கட்சி அலுவலகங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அதே சமயம், மகாராஷ்டிராவின் புனேவில் ராகுலை கண்டித்து பாஜவினர் பேரணி நடத்தினர்.

Related Stories: