கோழைகளுக்கு தலைவணங்க மாட்டோம்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில் கூறியிருப்பதாவது: நரேந்திர மோடி அவர்களே, வீரமரணம் அடைந்த பிரதமரின் மகனை துரோகி மிர் ஜாபர் என்று உங்கள் தோழர்கள் அழைத்தனர். ராகுல் காந்தியின் தந்தை யார் என்று உங்கள் முதல்வர் ஒருவர் கேள்வி எழுப்பினார். காஷ்மீர் பண்டிட்டுகள் வழக்கத்தின்படி, ஒரு மகன் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ‘முடிசூடி, தனது குடும்பத்தின் பாரம்பரியத்தைப் பராமரிக்கிறார்.

ஒட்டுமொத்த குடும்பத்தையும், காஷ்மீர் பண்டிட் சமூகத்தையும் அவமதித்த நீங்கள், நேரு என்ற குடும்ப பெயரை ஏன் வைக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் கேட்டீர்கள். ஆனால் எந்த நீதிபதியும் உங்களுக்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கவில்லை. உங்களை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்யவில்லை.  ராகுல் காந்தி உண்மையான தேசபக்தர். உங்கள் நண்பர் அதானியின் ஊழல் பற்றி கேள்வி எழுப்பியதால் அதிர்ந்து போனீர்கள். நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் பெரிய தலைவர்களை விட உங்கள் அதானி பெரியவரா? அப்படிப்பட்ட நீங்கள் எனது குடும்ப வம்சம் பற்றி பேசுகிறீர்கள். எங்கள் குடும்பம் தங்கள் ரத்தத்தால் இந்தியாவின் ஜனநாயகத்தை வளர்த்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எங்கள் குடும்பம் இந்திய மக்களின் குரலை உயர்த்தி, பல தலைமுறைகளாக உண்மைக்காக போராடியது. எங்கள் நரம்புகளில் ஓடும் ரத்தத்துக்கு ஒரு

சிறப்பு உண்டு. அது உங்களைப் போன்ற கோழைத்தனமான, அதிகார வெறி கொண்ட சர்வாதிகாரியின் முன் ஒருபோதும் தலைவணங்காது. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார்.

Related Stories: