29ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இக்கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம். கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அனைவரும் தவறாது கலந்துகொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் தலைமையில் 29 ம் தேதி நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் சமூக இடைவெளி பின்பற்றியும், முககவசம் அணிந்தும் கலந்துக் கொண்டு பயன்பெற வேண்டுமாய் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: