புதுடெல்லி: பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் ஒலிபரப்ப பாஜ முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அக்டோபர் 3ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாதம் தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 2வது முறையாக பாஜ ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது.