வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள் முழுவதும் நவரை பருவத்தில் பயிரிடப்பட்டவற்றை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் உள்ள நிலையில் இதற்கான நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் திறந்து வருகிறது. அதன் அடிப்படையில், வாலாஜாபாத் ஒன்றியம் ஐமஞ்சேரி ஊராட்சி கோவளவேடு கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.