ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டரம்பாக்கம் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யபட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் நெடுஞ்சாலையில் காட்ரம்பாக்கம் கூட்டு சந்திப்பில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவழியாக அதிவேகத்தில் வந்த காரை போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்டனர். இதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூல்லீப் போன்ற போதை வஸ்துக்கள் மூட்டை மூட்டையாக விற்பனைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.