தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் தூங்கிய வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவொற்றியூரை சேர்ந்தவர் மோகன் (எ) பல்லுமோகன் (37). இவர், திருமண பந்தல், சமையல் ஆர்டர் எடுக்கும் தொழில் செய்து வந்தார். அதன்படி, புது வண்ணாரப்பேட்டை, அருணாச்சல ஈஸ்வரர் கோயில் தெருவில் உள்ள முருகன் கோயில் விழாவுக்காக பந்தல் போடும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய மோகன், புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் பின்புறம் உள்ள மேற்கு மாட வீதியில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவில் படுத்து தூங்கியுள்ளார்.