கொலை வழக்கில் சிறை சென்றவர் வீட்டில் 110 பவுன் நகை கொள்ளை

மதுரை: மதுரை, கோரிப்பாளையம் கான்சாபுரம் மெயின் ரோட்டை ேசர்ந்தவர் அந்ேதாணி(82). இவர், கடந்த 9.11.2022ல் மனைவியை கொலை செய்த வழக்கில் கைதாகி  மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த  சில தினங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த அந்தோணி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு110 பவுன் தங்க நகைகள், ரூ.8 லட்சம் ரொக்கம், 3 டூவீலர்கள் கொள்ளை போயிருந்தது தெரிந்தது.

இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிந்து கோரிப்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார்(36), திருவேடகத்தை சேர்ந்த கணேசன்(46),  காளவாசலை சேர்ந்த செல்வகுமார் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 8 பவுன் நகை, ரூ.8 லட்சம், 3 டூவீலர்கள் மற்றும் 80 பவுன் நகைகள் அடகு வைத்த ரசீது பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: