ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மதுபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்தில் சைதன்யாபுரியில் உள்ள விக்டோரியா மினோரியால் மெட்ரோ ரயில் நிலையத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உள்ளது. அங்கு இரவு குடிபோதையில் வந்த இருவர் கையில் வைத்திருந்த கடப்பாறையால் இயந்திரத்தை பெயர்த்தெடுக்க முயன்றனர்.