சென்னை: போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இலவச பயிற்சி பெறுவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி. நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போர் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கும் பயிற்சி மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரியில் 500 பேருக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதேபோல் சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 பேருக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படுகிறது.