சமகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்: சரத்குமார் அறிவிப்பு

சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணி துணைச் செயலாளர்களாக சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தனலட்சுமி, சென்னை மாவட்டத்தைச் சார்ந்த ஷீபா சுந்தர் ஆகியோரும், வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக துரைசிங்கமும் நியமிக்கப்படுகிறார்கள். மேலும், ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்த ஜெகன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மாநில பொதுக்குழு உறுப்பினராகவும், ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளராக யுவராஜூம் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: