திருச்சி: விளையாட்டுத்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சியில் திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் நேர்காணல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அமைச்சரிடம் இந்தாண்டு பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படுமா? என கேட்டதற்கு, இந்தாண்டு ரூ.25 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.