புதுடெல்லி: தனது தந்தையால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியை நார்கோ டெஸ்டுக்கு உட்படுத்த வேண்டும் என்று அவரது முன்னாள் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் கடந்த சில தினங்களுக்கு முன் ெவளியிட்ட பதிவில், ‘நான் சிறுமியாக இருந்த போது எனது தந்தை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் என்னை அடித்தார். அதனால் நான் கட்டிலுக்கு அடியில் சென்று படுத்துக் கொண்டேன்’ என்று தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சுவாதி மாலிவாலுக்கு ‘நார்கோ டெஸ்ட்’ (உண்மை கண்டறியும் சோதனை) நடத்த வேண்டும் என்று அவரது முன்னாள் கணவர் நவீன் ஜெய்ஹிந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.