திருச்சி: முசிறியில் சக மாணவர்கள் தாக்கி உயிரிழந்த மவுலீஸ்வரன் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்த, தோளூர்பட்டியைச் சேர்ந்த மவுலீஸ்வரன் என்ற மாணவர் பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே எதிர்பாரத விதமாக நடந்த சம்பவத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, முசிறி டிஎஸ்பி யாஸ்மின் சம்பந்தப்பட்ட மாணவர்களை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்த நிலையில், கொலை வழக்கு பதிவு செய்து 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த செய்தியறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் மிகுந்த மனவருத்தமும், வேதனையும் அடைந்தேன்,மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.