பெங்களூர் : விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் கர்நாடகாவில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. கர்நாடகாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் லோக் போல் என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.