சென்னை: நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் ரிப்பேர் செய்ய கொடுத்த 347 கிராம் நகைகளை அடகு வைத்து மோசடி செய்த ஊழியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள தங்க நகைகள் விற்பனை கடையின் மேலாளர் சத்தியநாராயணன் (48) என்பவர், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை பற்ற வைப்பது, ரிப்பேர் செய்வதற்காக 347 கிராம் நகைகள் கொடுத்து இருந்தனர். அந்த நகைகளை எங்கள் கடையில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தங்க நகைகளை செய்யும் பிரபீர் ஷேக் என்பவர், அடகு வைத்து மோசடி செய்து ஏமாற்றியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.