எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தமிழகத்திற்கு நான் வருவதை யாரும் தடுக்க முடியாது: தமிழிசை பேட்டி

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நான் இரவல் ஆளுநர் என்று விமர்சித்தவர்களுக்கு முழுநேரம் பட்ஜெட் தாக்கல் செய்துகாட்டியது நான் அவர்களுக்கு அளிக்கும் பதில். சமூக வலைதளங்களில் ஏன் தமிழ்நாட்டிற்கு வருகிறீர்கள் என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். மகளிர் தின விழாவில் பங்கேற்க ஒரு சகோதரியாக தமிழகத்துக்கு வருகிறேன். அதை யாராலும் தடுக்க முடியாது. எனக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் தமிழகத்திற்குள் தமிழிசை வந்து கொண்டு தான் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: