பஞ்சாப் பொற்கோயிலில் ஜனாதிபதி முர்மு தரிசனம்

அமிர்தசரஸ்: ஜனாதிபதி திரவுபதி முர்மு  ஒரு நாள் பயணமாக நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு வந்தார். அங்குள்ள பொற்கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று சென்று தரிசனம் செய்தார்.அவருடன் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான், சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி  ஆகியோர் சென்றிருந்தனர். கோயிலின் தகவல் மையத்துக்கு சென்ற ஜனாதிபதியை கவுரப்படுத்தும் வகையில் அவருக்கு அங்கி,  சீக்கிய மத நூல்கள், பொற்கோயிலின் மாதிரி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

Related Stories: