புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் தமிழிசை உரையாற்றிய போது நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும் இரவல் ஆளுநர் நியமிக்க வேண்டாம் என பதாகையை காண்பித்து ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ நேரு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பின்னர், பாரதியாரின் வரிகளை வாசித்து ஆளுநர் தமிழிசை உரையாற்றினார்.