சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2014ம் ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில், தனக்கு பணி வழங்கக் கோரி அவரது மகள் சரஸ்வதி, அதே ஆண்டில் ஜூன் மாதம் விண்ணப்பித்தார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் விண்ணப்பித்தார். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விண்ணப்பித்துள்ளதாக கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து சரஸ்வதி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.