சென்னை: செஞ்சி கோட்டை ஏறுகிறவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது என்று பாஜ தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சியில் விருப்பப்பட்டு சேருபவர்களை தடுக்க முடியாது. அரசியல் ரீதியான பக்குவம் பாஜ தலைவர் அண்ணாமலைக்கு இருக்க வேண்டும். எல்லா கட்சியில் இருந்தும் அதிமுகவுக்கு வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். நான் சபாநாயகராக இருக்கும்போது முதல்வர் பதவிக்கு ஆசைபட்டதால்தான் ஜெயலலிதா சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கினார் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் 2016ம் ஆண்டு எனக்கு ஜெயலலிதா எம்எல்ஏ சீட் கொடுப்பாரா? .