சென்னை: பாஜகவில் இருந்து விலகிய ஐ.டி. பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நிர்மல் குமார் தலைமையில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இணைந்தனர். அதன்படி, பாஜக அறிவுசார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணைத் தலைவர் விஜய் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.