பாஜகவில் இருந்து விலகிய ஐ.டி. பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்..!!

சென்னை:  பாஜகவில் இருந்து விலகிய ஐ.டி. பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நிர்மல் குமார் தலைமையில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இணைந்தனர். அதன்படி, பாஜக அறிவுசார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணைத் தலைவர் விஜய் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று பாஜகவில் இருந்து விலகிய 2 நிர்வாகிகள் இன்று அதிமுகவில் இணைந்தனர். பாஜக மாநில தகவல் தொழிநுட்ப பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார். ஏற்கனவே பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார், அதிமுகவில் இணைந்தார். கூட்டணி கட்சியான அதிமுக, பாஜக நிர்வாகிகளை இணைப்பது சரியானதல்ல என்று அமர்பிரசாத் ரெட்டி விமர்சித்திருந்தார். இத்தகைய சூழலில் அண்ணாமலை தரப்பு விமர்சனத்தை பொருட்படுத்தாமல் பாஜக நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இணைத்து வருகிறார்.

Related Stories: