ஊட்டி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, 5 நாள் பயணமாக நாளை ஊட்டி வருகிறார். இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி நாளை (செவ்வாய்) 5 நாட்கள் பயணமாக ஊட்டிக்கு வருகிறார். முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர், அங்கிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக கார் மூலம் சாலை மார்க்கமாக ஊட்டிக்கு வருகிறார்.