மும்பை: ஐதராபாத்தில் நடந்த சினிமா ஷூட்டிங்கில் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டதால், அவரது படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். படப்பிடிப்பின் போது நடந்த சண்டைக் காட்சியில் எதிர்பாராத விதமாக அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவர் ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.