அருப்புக்கோட்டை: தாசில்தார்களுக்கு துணை கலெக்டர் பதவி உயர்வு இன்னும் 20 நாட்களில் வழங்கப்படும் என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க 2வது மாநில மாநாடு விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நேற்று நடந்தது. மாநில முன்னாள் துணைத்தலைவர் வின்சென்ட், மாவட்டத் தலைவர் லியாகத் அலி கொடியேற்றினர். மாநிலத்தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு வாழ்த்தி பேசுகையில், ‘‘கலைஞர் ஆட்சியில் தான் தலையாரி என்ற பெயரை கிராம உதவியாளர் என்று மாற்றினார்.