நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
*ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் திராட்சைப்பழமும் ஒன்று. திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் ‘சி’ சத்துக்கள் உள்ளன.*பித்தத்தை குறைத்து, உடல் வறட்சியை நீக்கும்.*ரத்தத்தை சுத்திகரிக்கும்.*நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும்.*கல்லீரலின் பலவீனத்தால் ஏற்படும் செரிமானப் பிரச்னையை நீக்கும். *ஜலதோஷத்தினால் ஏற்படும் இருமல், தும்மல் போன்றவற்றை திராட்சை பழச்சாறு குணப்படுத்துகிறது.*மார்புச்சளியைப் போக்கும், நுரையீரலைப் பாதுகாக்கும் வல்லமையும் திராட்சைப்பழச்சாறுக்கு உண்டு.*ரத்த சோகைக்கும், காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்து. குடல் மற்றும் உடல் புண்ணையும் ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.*களைப்பைப் போக்கி, ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும்.*அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றிற்கு திராட்சை கைகண்ட மருந்து.
தொகுப்பு - கே.பிரபாவதி, கன்னியாகுமரி.