சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கட்சி இன்று எழுச்சியாக, வேகமாக உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு போலியான வெற்றியை பெற்றுள்ளார்கள். ஆனாலும் கிட்டதட்ட 44 ஆயிரம் வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளார்கள். எங்களை பொறுத்தவரையில் தோல்விகரமான வெற்றிதான் இது. அவர்களை பொறுத்தவரையில் வெற்றி கிடையாது. எங்களை பொறுத்தவரையில் பார்த்தால் நாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம். அவர்கள் நினைத்தது அதிமுக டெபாசிட் இழந்துவிடுவோம் என்று.