டெல்லி: ஹிஜாவு, ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தலைமறைவாக உள்ள 15 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக பொருளாதார குற்றப்பிடிவு போலீசார் அறிவித்துள்ளனர். மக்களை நம்ப வைத்து நிதி மோசடி செய்த ஹிஜாவு, ஆருத்ரா நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிடிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதிக வட்டி தருவதாக மோசடி செய்த 3 வழக்குகளில் தொடர்புடைய 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.