புதுக்கோட்டை: வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரத்தில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. குடிநீரில் மனித கழிவு கலந்தது தொடர்பாக இதுவரை 112 பேரை விசாரித்த நிலையில் 45வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது டிச.26ம் தேதி தெரியவந்தது. அன்றில் இருந்து அந்த குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, மாற்று தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்பட்டது. மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.