திருப்பதி: தனது முதலிரவு காட்சியை சமூக வலைளத்தில் வாலிபர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மாமியார் கொடுத்த புகாரின்பேரில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் கத்ரேனிகோனா மண்டலத்தில் உள்ள கடற்கரை கிராமத்தை சேர்ந்த 20 வயது வாலிபர். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் பிப்ரவரி 8ம்தேதி பெற்றோர் ஏற்பாட்டின்பேரில் திருமணம் நடந்தது. அதன்பிறகு இருவீட்டு குடும்பத்தாரும், புதுமண தம்பதிக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது வாலிபர் தனது மனைவியுடன் இருக்கும் முதலிரவு காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.