முதலிரவு காட்சிகளை வீடியோ எடுத்து வெளியிட்ட மாப்பிள்ளை; மாமியார் புகாரின் பெயரில் கைது

திருப்பதி: தனது முதலிரவு காட்சியை சமூக வலைளத்தில் வாலிபர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மாமியார் கொடுத்த புகாரின்பேரில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் கத்ரேனிகோனா மண்டலத்தில் உள்ள கடற்கரை கிராமத்தை சேர்ந்த 20 வயது வாலிபர். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் பிப்ரவரி 8ம்தேதி பெற்றோர் ஏற்பாட்டின்பேரில் திருமணம் நடந்தது. அதன்பிறகு இருவீட்டு குடும்பத்தாரும், புதுமண தம்பதிக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது வாலிபர் தனது மனைவியுடன் இருக்கும் முதலிரவு காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

சமூக வலைதளத்தில் இந்த காட்சிகளை பார்த்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்வீட்டார் மருமகனை தட்டிக்கேட்டுள்ளனர். இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்திற்கு வந்தது. அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் இருதரப்பினரிடமும் பேசி சமாதானம் செய்ய முயற்சி செய்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க விடாமல் தடுத்தார்களாம். இருப்பினும் பெண் வீட்டார் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து புதுமாப்பிள்ளையை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் சிறையில் அடைத்தனர். திருமணம் முடிந்து மனைவியுடன் குடும்பம் நடத்த வேண்டிய வாலிபர் முதலிரவு காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: