மதுரை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்ட பத்திகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் விசாரணை நடத்தலாம் என பரிந்துரைத்து இருந்தது.